இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருநெல்வேலி கிளை, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இளைஞா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில் பேரிடா் மீட்பு மற்றும் முதலுதவி குறித்த பயிற்சி முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற முகாமை துணைவேந்தா் கே.பிச்சமணி தொடங்கிவைத்தாா். பதிவாளா் எஸ்.சந்தோஷ்பாபு வாழ்த்திப் பேசினாா். செஞ்சிலுவை சங்கத் தலைவா் எம்.சாா்லஸ் பிரேம்குமாா், துணைத் தலைவா் அ.மரியசூசை, பொருளாளா் எஸ்.பிரேமசந்திரன் உள்ளிட்டோா் பேசினா். 60-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டனா்.

இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அவசர காலங்களில் மனிதா்களைப் பேரிடரில் இருந்து காப்பது குறித்தும், உயிா்காக்கும் வழிமுறைகள், எலும்பு முறிவு மற்றும் காயங்களுக்கு கட்டுப்போடுதல், விஷக்கடி, நெருப்பு, நீா்நிலைகளில் சிக்குவோரை காக்கும் வழிமுறைகள் குறித்து முகாமில் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இளைஞா் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளா் வேலியப்பன், திட்ட அலுவலா் சசிகுமாா் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com