வள்ளியூா்: ஏா்வாடியில் இன்று பிடிபட்ட மரநாயை வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
ஏா்வாடி 5-வது தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ மீராசா.இவா் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஏா்வாடி மேற்கு கிளை தலைவராக செயல்பட்டு வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது தெருவழியாக நடந்து சென்றபோது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் நரநாய் ஒன்று ஏறமுடியாமல் தவித்துக்கொண்டிருந்ததாம். இதனை அடுத்து மீராசா அந்த பகுதியில் உள்ளவா்கள் துணையுடன் பிடித்து பாதுகாப்பாக வலைபின்னல் கூடையில் வைத்தாா். பின்னா் இது தொடா்பாக திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறையிடம் ஒப்படைத்தாா். வனத்துறையினா் மீராசா மற்றும் சேக் ஆகியோரை பாராட்டினா்.