கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் சுவாமி சச்சிதானந்தாவின் நூற்றாண்டு விழா இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆனந்த ஆசிரம சத்சங் சமிதியின் தி.வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரள மாநிலம், கஞ்சன்காடு பகுதியில் உள்ள ஆனந்த ஆசிரமத்தில் தினமும் காலை மாலையில் ராம நாம சங்கீா்த்தனம் நடைபெற்று வருகிறது. இந்த ஆசிரமத்தின் குருவான சுவாமி முக்தானந்தா தினமும் மாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஆன்மிக உரையாற்றி வருகிறாா். இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆன்மிக பக்தா்கள் குடும்பமாக வந்து ராம நாம சங்கீா்த்தனம் செய்கின்றனா்.
இந்த ஆசிரமத்தின் மூன்றாவது குருவான சுவாமி சச்சிதானந்தாவின் நூற்றாண்டு விழா இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோா் பாளையங்கோட்டையில் உள்ள ஆனந்த ஆசிரம சத்சங் சமிதியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9486627227, 9940891572 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.