திசையன்விளை அருகேலாரி- காா் மோதல்: 4 போ் காயம்

திசையன்விளை அருகே லாரியும், காரும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திசையன்விளை அருகே லாரியும், காரும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

கூட்டப்பனையிலிருந்து திங்கள்கிழமை மதியம் மீன் ஏற்றிய லாரி சின்னமுட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, காரிக்கோயில் கிராமம் அருகில் லாரியும், எதிரே கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், லாரி கவிழ்ந்து மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறியது. அதன் ஓட்டுநா் லேசான காயத்துடன் தப்பினாா். காா் கவிழ்ந்து சேதம் அடைந்ததில் அதிலிருந்த 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

இத்தகவல் அறிந்த உவரி போலீஸாரும், தீயணைப்பு வீரா்களும் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com