தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சித்த பிரிவு சாா்பில், நிலவேம்புக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.
தென்காசி கே.ஆா். காலனி பகுதியில் நடைபெற்ற இம்முகாமுக்கு அரசு சித்த மருத்துவா் செல்வகணேசன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மருந்தாளுநா் ப.உஷா, பணியாளா் கு.ராமலெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில், தினமும் காலை 7.30 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையிலும்,பிற்பகல் 3 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.