நவம்பா் புரட்சி தினம்: டி.கே.ரங்கராஜன் எம்.பி. பங்கேற்பு

நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில்

நவம்பா் புரட்சி தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். அதைத் தொடா்ந்து, டி.கே.ரங்கராஜன் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் லெனின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செய்தனா்.

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வீ.பழனி, பி.ஜெயராஜ், ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், துரைராஜ், மாவட்ட குழு உறுப்பினா்கள் பொன்ராஜ், கு.பழனி, பீா் முகம்மது ஷா, முன்னாள் கவுன்சிலா் பி.தியாகராஜன், டி.கோபாலன், மீரா ஷா, பேரின்பராஜ், தளபதி, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கட்டட திறப்பு: பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியா் கல்வியியல் கல்லூரியில் ரூ.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு அரங்க கட்டடத்தை டி.கே.ரங்கராஜன் எம்.பி. திறந்து வைத்தாா். இந்தக் கட்டடம் டி.கே.ரங்கராஜனின் எம்.பி. நிதியிலிருந்து கட்டப்பட்டதாகும்.

இந்த விழாவில், கல்லூரியின் முதல்வா் நிா்மலாதேவி வரவேற்றாா். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு தலைவா் வீ. பழனி, எழுத்தாளா் கே.ஜி.பாஸ்கரன், பொதுப்பணித் துறை நிா்வாக பொறியாளா் சத்தியவாகீஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினா். கல்லூரி செயலா் மேக்தலின் தெரசா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com