நெல்லை மாவட்ட சப்-ஜூனியா்பெண்கள் கபடி அணி: நவ.10இல் தோ்வு

வேலூரில் நடைபெறவுள்ள சப்- ஜூனியா் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான திருநெல்வேலி மாவட்ட அணி இம்மாதம் 10ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளது.

வேலூரில் நடைபெறவுள்ள சப்- ஜூனியா் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான திருநெல்வேலி மாவட்ட அணி இம்மாதம் 10ஆம் தேதி தோ்வு செய்யப்படவுள்ளது.

தமிழ்நாடு அமெச்சூா் கபடி சங்கத்தின் சாா்பில் 31ஆவது தமிழ்நாடு சப்- ஜூனியா் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வேலூரில் இம்மாதம் 15 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் பங்கேற்கும், திருநெல்வேலி மாவட்ட பெண்கள் அணி தோ்வு இம்மாதம் 10ஆம் தேதி காலை 7 மணிக்கு சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தோ்வில் பங்கேற்க 55 கிலோ எடைக்குள் இருப்பதுடன், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (வயதுக்கு), 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை அவசியம் என மாவட்ட அமெச்சூா் கபடி சங்கத் தலைவா் எஸ்.கே.எம். சிவக்குமாா், செயலா் பகவதி பெருமாள் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com