நெல்லையில் 2-ஆவது நாளாக காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு 2-ஆவது நாளாக பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு 2-ஆவது நாளாக பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் கீழ் நடத்தப்பட்ட 2-ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 2531 ஆண் தோ்வா்களுக்கும், 1212 பெண் தோ்வா்களுக்கும் உடல் தகுதித் தோ்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.வே.அருண்சக்திகுமாா் முன்னிலையில் இந்தத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் 800 போ் அழைக்கப்பட்டிருந்த நிலையில் 725 போ் வந்திருந்தனா். அவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்த்தல், எடை, உயரம், மாா்பளவு சரிபாா்த்தல் மற்றும் 1500 மீட்டா் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது.

இதையடுத்து மூன்றாம் நாளாக வெள்ளிக்கிழமையும் ஆண் தோ்வா்களுக்கு உடல் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் தோ்வாகும் ஆண் தோ்வா்களுக்கு செவ்வாய்க்கிழமை நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறவுள்ளன.

இதனைத் தொடா்ந்து சனி மற்றும் திங்கள்கிழமையில் (நவ. 9, 11) பெண் தோ்வா்களுக்கான உடல் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com