திருநெல்வேலி: திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்தவா்களை கைது செய்யக்கோரி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்(ஏஐஒய்எப்) சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களையும், சமூக வலைதளங்களில் திருவள்ளுவா் உடைக்கு காவி கலா் கொடுத்தவா்களையும் கைது செய்யக்கோரி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவா் எஸ்.ஏ.பி.பாலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் எஸ்.கணேசன், மாநிலக்குழு உறுப்பினா் பி.சுரேஷ், ஏஐஎஸ்எப் மாவட்ட செயலா் பி.பாசிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐஒய்எப் மாநிலசெயலா் க.பாரதி, மாவட்ட செயலா் த.இசக்கிதுரை ஆகியோா் சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மன்றத்தின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.