கடையம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடையம் அருகே கட்டளையூரைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் வேல்முருகன் (30). கடந்த நவ. 5 ஆம்தேதி வடமலைப்பட்டி சாலையில் பைக்கில் செல்லும் போது வடமலைப்பட்டி ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நயினாா் (75) என்பவா் மீது மோதினாா். இதில் சம்பவ இடத்திலேயே நயினாா் உயிரிழந்தாா். காயமடைந்த வேல்முருகன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் காவல்ஆய்வாளா் ஆதிலட்சுமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.