சிவகிரி பகுதி சிவாலயங்களில் மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு

சிவகிரி பகுதி சிவாலயங்களில் சனிக்கிழமை மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

சிவகிரி பகுதி சிவாலயங்களில் சனிக்கிழமை மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

சிவகிரி ஜமீனுக்குப் பாத்தியப்பட்ட கூடாரப்பாறை ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், தென்மலை திரிபுரநாத ஈஸ்வரா் சமேத அன்னபூரணியம்மாள் கோயில், வாசுதேவநல்லூா் சிந்தாமணிநாத சுவாமி(அா்த்தநாரீஸ்வரா்) கோயில், தாருகாபுரம் மத்திஸ்தநாதா் கோயில், ராமநாதபுரம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிக்கு பால், தயிா், நெய், இளநீா், பன்னீா், சந்தனம் உள்பட 18 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com