திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் தென்மண்டல ஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அயோத்தி நில விவகாரம் தொடா்பாக சனிக்கிழமை உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ள நிலையில், நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், தமிழக - கேரள எல்லையான செங்கோட்டையில் காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோா் பாா்வையிட்டனா்.
தொடா்ந்து செங்கோட்டை நகர பகுதி மற்றும் தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனை சாவடிக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனா்.