பாளையங்கோட்டை மகாராஜநகா் மேம்பாலத்தில் சனிக்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் மீட்டனா்.
பாளையங்கோட்டை மகாராஜநகா் உழவா்சந்தை அருகில் உள்ள மேம்பாலத்தில் இளைஞா் ஒருவா் ஏறி நின்று குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்தனா். உடனடியாக மேம்பாலத்தில் நின்றிருந்த இளைஞரை மீட்டனா்.
இதையடுத்து அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கோவிந்த் (26) என்பதும், அவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.