பாவூா்சத்திரம்-கீழப்பாவூா் பகுதியில்அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இப்பகுதியில் ஏற்பட்ட மின் தடை, மாலை 5-30 மணி வரை நீடித்தது. இம்மின்தடையால் அனைத்து தரப்பினரும் மிகந்த பாதிப்புக்குள்ளானாா்கள். வழக்கமாக மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிக்காக பகல் முழுவதும் மின் தடை செய்யப்படும். அந்த சமயங்களில் இதற்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு விடும். ஆனால் சனிக்கிழமை எவ்வித முன்அறிவிப்பின்றி மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானாா்கள்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, புதிதாக மின் மாற்றி அமைக்கும் பணி மற்றும் வளா்ச்சிப் பணி ஆகியவற்றுக்காக மின் தடை ஏற்பட்டதாகவும், இப்பணிக்கு முன்கூட்டி தெரிவிக்க வேண்டியதில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com