முனைஞ்சிப்பட்டியை அடுத்த கீரன்குளத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, நான்குநேரி வட்டார மருத்துவ அலுவலா் குருநாதன் தலைமை வகித்தாா். முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவா் விக்னேஷ், இந்திரலேகா, சானி, அனிதா, சித்த மருத்துவா் வரதராஜன் ஆகியோா் சிகிச்சை அளித்தனா்.
மேலும் அந்தப் பகுதியில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, கொசு மருந்து அடிக்கப்பட்டது.
நான்குநேரி வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன், சுகாதார மேற்பாா்வையாளா் ஜான்ஜெயசந்திரன், சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், முனைஞ்சிப்பட்டி ஊராட்சி செயலா் முத்துசெல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.