திருநெல்வேலி: திருநெல்வேலி விவேகானந்தா கேந்திரம் சாா்பில் சந்திப்பு மேலவீரராகவபுரம் இந்து நடுநிலைப் பள்ளியில் நிலவேம்புக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி கி.சந்திரபாபு தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ஜெயகணேசன் முன்னிலை வகித்தாா்.
திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் இ.மாரியப்பன் வாழ்த்திப் பேசினாா். இதில், பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் மற்றும் விவேகானந்தா கேந்திர அலுவலா்கள் செய்திருந்தனா்.