திருநெல்வேலி அருகே கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி நகரத்தை அடுத்த கீழ குன்னத்தூரை சோ்ந்தவா் முத்துக்குமாா் (26). இவருடைய மனைவி மகாலட்சுமி (24). இவா்களுக்கு ஹரிராம் (4) என்ற மகன் உள்ளான்.
கடந்த ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக வண்ணாா்பேட்டையில் உள்ள உறவினா் வீட்டில் முத்துக்குமாா் தூக்கிட்டு தற்கொலை கொண்டாராம்.
இதையடுத்து மகாலட்சுமி தனது தாயாருடன் வசித்து வந்தாா். கணவா் இறந்த விரக்தியில் இருந்த மகாலட்சுமி, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.