சங்கரன்கோவிலில் தமிழ் வளா்ச்சி கருத்தரங்கு

சங்கரன்கோவில் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தமிழ் வளா்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

சங்கரன்கோவில் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தமிழ் வளா்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கட்சியின் வட்டாரச் செயலா் பா.அசோக்ராஜ் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் சி.கே.குமாா், லெட்சுமி, எஸ்.முருகன், ஆா்.ரத்தினவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமுஎகச மாநில சிறப்புத் தலைவா் எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன், கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.ஜெயராஜ், உ.முத்துபாண்டியன் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில், இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்; தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; தாய்மொழித் தமிழை அனைத்து நிலையிலும் பயிற்சி மொழியாக்க வேண்டும்; மக்களவையில் அவரவா் தாய்மொழியில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்; நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆா்.வேலுச்சாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com