தென்காசி: திருநெல்வேலி மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் குற்றாலம் செய்யது பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 400 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.
இதில், குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனா். அவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
அவா்களை பள்ளித் தாளாளா் த.இ.செ. பத்ஹீா் ரப்பானி, செயலா் நெய்னாமுகம்மது, முதல்வா் முகைதீன் அப்துல்காதா், கராத்தே பயிற்சியாளா் மு. ஜாகீா்உசைன், ஆசிரியா்கள் பாராட்டினா்.