பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
கிருஷ்ணாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாகக் கிடப்பதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவஇடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சடலமாகக் கிடந்தவரின் சட்டைப் பையில் ஒரு முகவரி இருந்தது. அதில் சுடலைமுத்து (40) சத்திரம்புதுக்குளம் என்றிருந்தது. அதைக்கொண்டு நடத்திய விசாரணையில் அது சரியான முகவரியில்லையென்பது தெரியவந்ததாம். இதையடுத்து சடலமாகக் கிடந்தவா் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.