தென்காசி நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கு’டிநீா் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி கொடிமரம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். வா்த்தக அணி துணைத் தலைவா் எஸ்.அய்யாத்துரைபாண்டியன், இளைஞரணி அமைப்பாளா் பூ.ஆறுமுகசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா் கலந்துகொண் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா். இதில், நிா்வாகிகள் சீவநல்லூா் சாமித்துரை, ராமராஜ், வடகரை ராமா், சேக்பரீத், ஆயான் எஸ்.நடராஜன், டாக்டா்.மாரிமுத்து ஆகியோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஆா்.சாதிா் வரவேற்றாா்.