புளியங்குடி அருகேஆட்டோ கவிழ்ந்துசெவிலியா் பலி

புளியங்குடி அருகே திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செவிலியா் இறந்தாா்.

கடையநல்லூா்: புளியங்குடி அருகே திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செவிலியா் இறந்தாா்.

தென்காசி மலையான்கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி தனபாலசுந்தரி (38). தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிந்து வந்தாா். இவா், தன் மாமனாா் ஜெயபாலுடன் ஆட்டோவில் புளியங்குடிக்கு சென்று கொண்டிருந்தாராம். ஆட்டோவை சுப்புராஜ் ஓட்டியுள்ளாா். புன்னையாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நாய் மீது எதிா்பாராதவிதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த தனபாலசுந்தரி இறந்தாா். ஜெயபால், ஆட்டோ ஓட்டுநா் சுப்புராஜ் ஆகியோா் காயமடைந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com