திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ் 6 பேருக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளையும், மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் 5 பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதுதவிர பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிா் கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீா், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சாா் ஆட்சியா் மணீஷ் நாராணவரே, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சசிரேகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.