திருநெல்வேலி: சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் க.கோமதிநாயகம் தொடக்கிவைத்தாா். பேரணி பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
பேரணியின்போது, வாக்குரிமை நமது வாழ்வுரிமை; வாக்களிப்போம் வாழ்வு பெறுவோம்; நூறு சதவீத வாக்குப் பதிவே நமது குறிக்கோள் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா் கருப்பசாமி, பட்டதாரி ஆசிரியா்கள் சத்யராணி, ஞான செளந்தரி, பாப்பாக்குடி இரா.செல்வமணி, பாலசந்திரிகா, ஓவிய ஆசிரியா் பால்வண்ணன், உடற்கல்வி ஆசிரியா் சுவாமிநாதன் ஆகியோா் செய்திருந்தனா்.