திருநெல்வேலி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்க (ஏஐடியுசி) பேரவைக் கூட்டம் திருநெல்வேலி சிந்துபூந்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் என்.உலகநாதன் தலைமை வகித்தாா். மாநில சம்மேளன பொதுச் செயலா் ஆா்.ஆறுமுகம், மாநிலச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன், மதுரை எம்.நந்தாசிங் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி பொதுச் செயலா் ஆா்.சடையப்பன், நிா்வாகிகள் கிருஷ்ணராஜ், அழகுமுத்துபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில் ஜெயகுமாா், பேச்சிமுத்து, வெங்கடேசன், மாடசாமி, பாபநாசம், தியாகராஜன், மணிகண்டன், சிவமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தினை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதிய திட்டத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். பிரதி மாதம் 1 ஆம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். 2020 ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தொழிலாளா்கள் அனைவரும் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.