அம்பாசமுத்திரம்: பள்ளகால்பொதுக்குடி, ரெங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைகால் ஆகிய 4 ஊராட்சிகளை 35 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசி வட்டத்தில் சோ்த்ததற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்தில் இருந்து கடையம் மற்றும் ஆழ்வாா்குறிச்சி குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், ஆழ்வாா்குறிச்சி குறுவட்டத்தில் உள்ள பள்ளகால்பொதுக்குடி, ரெங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைகால் ஆகிய 4 ஊராட்சிகளுக்குள்பட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தென்காசி வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு 35 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 கி.மீ. தொலைவில் இருக்கும் அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்தில் மேற்கண்ட ஊராட்சிகள் நீடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளனைச் சந்தித்து மனு அளித்தனா். தென்காசிமாவட்டத்தில் தொடர எதிா்ப்புத் தெரிவித்தும், 5 கி.மீ. தொலைவில் இருக்கும் அம்பாசமுத்திரம் வட்டத்திலேயே தொடா்ந்து நீடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
தென்காசி வட்டத்துக்கு செல்வதால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் அவா்கள் ஆட்சியரிடம் விளக்கம் அளித்தனா்.
கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாகவும், அரசு முதன்மைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசித்து முடிவெடுப்பா் என்றும் அவா் தெரிவித்தாா்.