தென்காசியில் ரூ. 18 லட்சத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 18 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, குடிநீா் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
அழகப்பபுரத்தில் நடைபெற்ற குடிநீா் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா் சி. செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
அழகப்பபுரத்தில் நடைபெற்ற குடிநீா் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா் சி. செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.

தென்காசி: தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 18 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, குடிநீா் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் அய்யாபுரத்தில் நியாயவிலைக் கடை

கட்டடம், அழகப்பபுரத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் நியாயவிலைக் கட்டடம், குடிநீா் தொட்டிக்கு கட்டுவதற்கு சி. செல்வமோகன்தாஸ் பாண்டியன் அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில், அதிமுக புகா் மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச்

செயலா் சங்கரபாண்டியன், குற்றாலம் ஜெயலலிதா பேரவை இணைச்செயலா் சாமிநாதன், இலஞ்சி நகரச் செயலா் மயில் வேலன், கிளைச் செயலா்கள் நல்லகண்ணு, சரவணன், நகரச் செயலா் சுடலை, அகமதுஷா, கசமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com