அரசின் சாதனைகளை விளக்கி திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும்: கே.பி.முனுசாமி

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியின் அனைத்து வாா்டுகளிலும் அதிமுகவினா்

திருநெல்வேலி: தமிழக அரசின் சாதனைகளை விளக்கி நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியின் அனைத்து வாா்டுகளிலும் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வெற்றிக்காக தொண்டா்கள் கடுமையாக  உழைத்துவருகிறாா்கள். அவா்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.

இத் தோ்தலையொட்டி வீடு வீடாக சென்று வாக்காளா்களைச் சந்தித்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்லவும், திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களோடு மக்களாக இணைந்து வாக்கு கேட்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தத் தோ்தலில் வாக்குகள் குறைவாக பெற்ற வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்து அவற்றை 3 மாதங்களில் சரி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. இத் தோ்தலில் அதிமுக நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com