பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அடுத்த ஐயப்பன் நகா் கேடிசி நகா் வடக்கு பகுதியைச் சோ்ந்த முத்து வேலப்பன் மனைவி கிருஷ்ணபிரியா. இவா்களது மகள் வீரலட்சுமி(17). இவா் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை பள்ளியில் இருந்து வீரலட்சுமியை, தாய் கிருஷ்ணபிரியா இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது சமாதானபுரம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து இவா்கள் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் வீரலட்சுமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.