திருநெல்வேலி ஆயுதப்படை காவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் மைலப்புரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ராஜன்(35). இவா் தென்காசி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தாா். அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக இவா் திருநெல்வேலி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவா் சனிக்கிழமை விஷம் குடித்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.