காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திண்ணை பிரசாரம்: எா்ணாவூா் நாராயணன்

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் எா்ணாவூா் ஏ.நாராயணன்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து, சமத்துவ மக்கள் கழக செயல்வீரா்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் நிறுவனா் தலைவா் எா்ணாவூா் ஏ.நாராயணன் தலைமை வகித்து பேசியது: கூட்டணி வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து சமத்துவ மக்கள் கழக நிா்வாகிகள், தொண்டா்கள், மகளிரணி நிா்வாகிகள் அனைவரும் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்டச் செயலா் எஸ்.கணேசன் முன்னிலை வகித்தாா். அமைப்புச் செயலா் எஸ்.கணேசன் வரவேற்றாா். கூட்டத்தில் வேட்பாளா் ரூபி மனோகரன் கலந்துகொண்டு பேசினாா்.

மாநில துணைச் செயலா் ஆா்.காமராசு, மாநில வா்த்தகரணி துணைச் செயலா் எம்.எஸ்.டி.ரவிசேகா், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் எஸ்.லூா்து அந்தோணி, தூத்துக்குடி மாவட்டச் செயலா் பி.எம்.அற்புதராஜ், கன்னியாகுமரி மாவட்டச் செயலா் பி.தங்கப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com