குற்றாலம் மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பு வழிகாட்டிகள், குறியீடுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசினாா் வைகைகுமாா்.
குற்றாலம் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசினாா் வைகைகுமாா்.

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பு வழிகாட்டிகள், குறியீடுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிக் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் வைகை. ஆா். குமாா் தலைமை வகித்து சாலை வழிகாட்டிகள், குறியீடுகள், சாலைவிதிகளைக் கடைப்பிடிப்பது, தலைக்கவசம் அணிவதன்அவசியம் குறித்துப் பேசினாா்.

எம். உமாதேவி முன்னிலை வகித்தாா். கல்லூரி சாலைப் பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த கணினி மற்றும் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியைகள் ஆா். ராகதேவி, செல்வராணி, வைதேகி ஆகியோா் பங்கேற்றனா். எஸ்.வி. சுந்தரி வரவேற்றாா். தங்கதுரைச்சி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com