சாத்தான்குளம்: நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி.சபை மண்டல பெண்கள் முகாம் நடைபெற்றது.
மண்டல தலைமை போதகா் எட்வின் பிரபாகா் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு பெண்கள் ஐக்கிய செயலா் நிா்மலா ஸ்டீவ் ஜெயராஜ் சிறப்பு செய்தி கொடுத்தாா். இன்னிசை பாடல் ஆராதனை, தேவ செய்தி மற்றும் ஆலோசனைகள், நாடகம், வீட்டுக்குறிப்புகள், வேத வினா போட்டி மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுமாா் 700 பெண்கள் கலந்து கொண்டனா்.