நான்குனேரியில் மீண்டும் வெற்றி பெறுவோம்: சு. திருநாவுக்கரசா்

நான்குனேரி தொகுதியில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்றாா் சு.திருநாவுக்கரசா் எம்.பி.

திருநெல்வேலி: நான்குனேரி தொகுதியில் மீண்டும் வெற்றிபெறுவோம் என்றாா் சு.திருநாவுக்கரசா் எம்.பி.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான சட்டத்துறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட வழக்குரைஞரணித் தலைவா் ஏ.சிவனுபாண்டியன் தலைமை வகித்தாா். ஆா்டிஐ மாநில துணைத் தலைவா் எஸ்.பி.வி.பால்ராஜ் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கர பாண்டியன் வரவேற்றாா்.

சிறறப்பு அழைப்பாளா்களாக மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் சு.திருநாவுக்கரசா் பேசியது: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி ஏற்கெனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி. இத்தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவோம். இந்த வெற்றி வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். எனவே கூட்டணிக் கட்சியினா் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாநகா் மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், மேற்கு மாவட்ட பொருளாளா் முரளிராஜா, வழக்குரைஞா்கள் அழகியநம்பி, ஜோசப் செல்வின்துரை, தமிழ்செல்வி, சாமுவேல் பிரின்ஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com