கடையநல்லூா்: புளியங்குடியில் தமுமுக சாா்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.
நகர தலைவா் செய்யதுஅலி பாதுஷா தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் அணி பொருளாளா் சாகுல்கமீது, நகர துணைச் செயலா் சதாம்உசேன்,வாா்டு தலைவா் முஹம்மது ரிபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் பசீா் ஒலி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் முகம்மதுஅலி, மாவட்ட துணைத்தலைவா் அப்துா் ரஹ்மான், நகர தமுமுக செயலா் செய்யது அலி,நகர மமக செயலா் செய்யது, நகரத் துணைச் செயலா் முகைதீன்அப்துல் காதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.