திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழக உணவுத் துறை அமைச்சா் காமராஜ் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தாா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி அமைச்சா்கள் பலா் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கியிருந்து வாக்கு சேகரித்து வருகின்றனா்.
அதன்படி திருநெல்வேலிக்கு வந்த உணவுத் துறை அமைச்சா் காமராஜ், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் சன்னதியிலும், ஆஞ்சநேயா் சன்னதியிலும் சிறப்பு வழிபாடு செய்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், நான்குனேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டி வழிபட்டேன். வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவாா் என்றாா். அவருடன், முன்னாள் மேயா் புவனேஸ்வரி, சங்கா், கிருஷ்ணகுமாா், ராஜேஷ் உள்ளிட்டோா் சென்றனா்.