கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை ஒட்டி கொலு பூஜை,சிறப்பு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
செப்.29 ல் தொடங்கிய நவராத்திரி விழாவில் 9 நாள்களும் காலையில் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெற்றது. பிற்பகல் கும்பபூஜையும், இரவில் கொலு பூஜையும் நடைபெற்றன.
விழாவின் 9 ஆம் நாளான திங்கள்கிழமை சரஸ்வதி பூஜையை ஒட்டி யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பாரிவேட்டை நடைபெற்றது.
11 ஆம் நாள் முதல் 15 ஆம் நாள் வரை ஊஞ்சல் வைபவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சிவஸ்ரீ குமரகுருக்கள், சிவஸ்ரீ சிவாம்பிகை கணேஷ் மற்றும் மண்டகபடிதாரா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்