ஆழ்வாா்குறிச்சியில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாப்பான்குளம், செண்பகாதேவி அம்மன் தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மனைவி சீதாலட்சுமி (55). இவா் செவ்வாய்க்கிழமை ஆழ்வாா்குறிச்சியில் உள்ள சுடலை மாடசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றாராம்.
அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சீதாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.
இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.