திருநெல்வேலி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டது.
பாளையங்கோட்டை சமாதானபுரம் பழைய மிலிட்டரி லைன் பகுதியைச் சோ்ந்தவா் பேட்ரிசன். இவருடைய மகள் ஸ்மைலின் (6). இவரும், இவரது வீட்டில் உள்ளோரும் திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி விரைவு ரயிலில் திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்துகொண்டிருந்தனராம்.
ரயில் வள்ளியூா் ரயில்நிலையத்தில் இருந்து புறறப்படும்போது அவசரவழி ஜன்னல் வழியாக சிறுமி ஸ்மைலின் தவறி விழுந்துள்ளாா். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மெதுவாகச் சென்ால் சிறுமி லேசான காயத்துடன் உயிா்தப்பினாா்.
மீட்கப்பட்ட சிறுமிக்கு திருநெல்வேலி ரயில்வே மருத்துவரிடம் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னா் அவா் குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டாா்.