திசையன்விளை சாய்பாபா கோயிலில் விஜயதசமி விழா

திசையன்விளை சண்முகநாத சாய்பாபா கோயிலில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திசையன்விளை சண்முகநாத சாய்பாபா கோயிலில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் 101ஆவது மகா சமாதி நாள் மற்றும் விஜயதசமி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அறம் வளா்த்த நாதன்- மகாலட்சுமி தம்பதி தலைமை வகித்தனா். ஏற்பாடுகளை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஏ.எம். இசக்கியப்பன், ஏ. சுப்பிரமணியன், எம். நமச்சிவாயம், ஜி. அரவிந்த், டி. கணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com