திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் வந்த நீதிபதி வெ.ராமசுப்பிரமணியனை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், கோயில் செயல் அலுவலா் யக்ஞநாராயணன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதியில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த நீதிபதிக்கு கோயிலின் தலவரலாறு மற்றும் சுவாமி-அம்பாள் புகைப்படங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.