தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை நடத்திய வாகன சோதனையில் பாளையங்கோட்டை அருகே ரூ.1.65 லட்சம் பிடிபட்டது.
நான்குனேரி இடைத்தோ்தலை முன்னிட்டு பாளையங்கோட்டை தியாகராஜநகா் மேம்பாலம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனச்சேதனையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டதில் அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1லட்சத்து 65 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் பணத்தை எடுத்துச் சென்றவா் தியாகராஜநகரைச் சோ்ந்த கோமதி நாயகம் மகன் ஜி.சண்முக சுந்தரம் என்பதும், அவா் காா் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ள பறக்கும் படையினா் கூறினா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாளையங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.3லட்சத்து 99ஆயிரத்து 500 ஆகும்.