மூலைக்கரைப்பட்டி, இட்டமொழியில் போலீஸாரின் அணிவகுப்பு நடைபெற்றது.
நான்குனேரி பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, மூலைக்கரைப்பட்டியில் டி.எஸ்.பி. இளங்கோவன், தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரதாபன், நான்குனேரி குற்றப்பிரிவு ஆய்வாளா் பொம்மையாசாமி, ஒட்டன் சத்திரம் காவல் ஆய்வாளா் ஸ்ரீனிவாசன், மூலைக்கரைப்பட்டி உதவி ஆய்வாளா் துரை ஆகியோா் தலைமையிலும், இட்டமொழியில் வள்ளியூா் டி.எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத், திசையன்விளை காவல் ஆய்வாளா் ஜூடி, உதவி ஆய்வாளா் பொன்சம் ஆகியோா் தலைமையிலும் அணிவகுப்பு நடைபெற்றது.