செங்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித்தொகை வழங்கக் கோரி மனு அளிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாரச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் பால்ராஜ், வட்டாரச் செயலா் வேலுமயில், வட்டாரக் குழு உறுப்பினா் பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செங்கோட்டை மேலூா், பகவதியாபுரம், புளியறை, தெற்குமேடு, விசுவநாதபுரம் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பேரணியாக வந்து வட்டாட்சியா் அலுவலகம் வளாகத்தில் உள்ள புகாா் பெட்டியில் மனுக்களை இட்டுச் சென்றனா்.
நிகழ்ச்சியில், வட்டாரக் குழு உறுப்பினா்கள் கசமுத்து, முருகன், ஆயிஷா, சின்னச்சாமி, ராஜீ, பெருமாள், மல்லிகா, செல்லத்தாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.