தென்காசியில் டாஸ்மாக் மதுக்கடையில் கதவை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி வாய்க்கால்பாலம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கிவருகிறது. இங்கு, புதன்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் பணியாளா்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனா். பின்னா், வியாழக்கிழமை காலையில் கடையை திறப்பதற்காக வந்தபோது, கடையின் முன்கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையின் உள்ளே மா்மநபா்கள் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேற்பாா்வையாளரான சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த பூபதி, தென்காசி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். காவல்ஆய்வாளா் ஆடிவேல் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து தென்காசி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, முந்தைய நாள் விற்பனை தொகை வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டிருந்ததால் திருடா்களிடம் இருந்து தப்பியது தெரியவந்தது.