தென்காசி கொடிக்குறிச்சி நல்லமணி வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியின் 2 ஆம் ஆண்டு விழா, விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, தென்காசி சரக காவல் துணைக்கண்காணிப்பாளா் (பொறுப்பு) ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா், மாணவிகளுக்கு டி.எஸ்.பி. பரிசுகள் வழங்கிப் பேசினாா். இதில், கடையநல்லூா் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்பாா்வையாளா் எஸ்.பெருமாள், இலத்தூா் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்விக் குழுமங்களின் தலைவா் என். மணிமாறன், செயலா் பத்மாவதி மணிமாறன் கலந்துகொண்டனா்.
முதல்வா் பா.மகேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் நற்பினைநங்கை நன்றி கூறினாா்.