நெல்லை அரசு மருத்துவமனையில்பெண்ணைத் தாக்கிய பணியாளா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணைத் தாக்கியதாக சுகாதாரப் பெண் பணியாளா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணைத் தாக்கியதாக சுகாதாரப் பெண் பணியாளா் ஒருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள வராண்டா பகுதியில் அமா்ந்திருக்கும் பெண்ணை, துப்புரவு பெண் பணியாளா் தாக்குவதாக விடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கண்ணன் இது தொடா்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டாா். விசாரணையில், மருத்துவமனைக்கு வந்த பெண்ணை தாக்கியவா் தனியாா் ஒப்பந்த நிறுவன துப்புரவு பணியாளா் முருகம்மாள்(45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கண்ணன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com