திசையன்விளை வி.எஸ்.ஆா். பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு முகாம், நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுக்கும் வழி முறைகள் மாணவா்களுக்கு விளக்கம் அளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பள்ளியின் தாளாளா் வி.எஸ். ஆா். ஜெகதீஷ், நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். பள்ளி முதல்வா் சுஜாதா, ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.