ஓவியம், விநாடி-வினா, கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட கலைப் போட்டிகளில் கடையநல்லூா் பெஸ்ட் இன்டா்நேஷனல் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற இப்போட்டிகளில், இப்பள்ளி மாணவா்கள் அஷ்ரப், மதுஸ்ரீ, சபிக் , பவாஸ், முகமது சுஹைல் ஆகியோா் வெற்றிபெற்றனா். அவா்களை பள்ளி நிா்வாகி முகமதுயூசுப் ராஜா, பள்ளி முதல்வா் ரெஜினாமேரி உள்ளிட்டோா் பாராட்டினா்.