முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 35 ஆவது நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் சிலைக்கு மாலைஅணிவித்தாா்.
பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ரூபி ஆா்.மனோகரன், மேற்கு மாவட்ட பொருளாளா் எஸ்.பி.முரளிராஜா, நிா்வாகிகள் உமாபதிசிவன், சொக்கலிங்ககுமாா், ராஜேஷ்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பயக31இஞசஎ: திருநெல்வேலியில் இந்திராகாந்தி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.